Posts

பூரண உள்ளொளி கண்டடைதல்

Image
மகளிர் தினத்தன்று நம்மில் ஒருவரான திருமதி ராதா பரசுராம் அவர்கள் எழுதி பிரசுரித்த  "பூரண உள்ளொளி கண்டடைதல்" என்னும் குறும்புத்தகத்தை (20 பக்கங்கள் மட்டும்) வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. முன்னுரையில் மனதை ஒருமைப்படுத்தும் முயற்சியில் தனக்கு ஏற்பட்ட மேம்பட்ட அனுபவத்தை பகிர துவங்கும் ஆசிரியர் கீத் மில்லர், மைக்கேல் ஏ சிங்கர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகளை கோடிட்டு காட்டி நம் ஆர்வத்தை தூண்டுகிறார். பின்வரும் பக்கங்களில் "தான் எவ்வாறு தியான முயற்சியை தொடங்கினேன், அதில் ஏற்பட்ட சவால்கள், பின் எவ்விதம் வேறு வேறு முறைகளை பின்பற்றி வெற்றி அடைந்தேன்" என்பதை விளக்கமாக சொல்லிக் கொண்டே வரும் ஆசிரியர் நடுநடுவே அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு  சவால்களையும்  எழுதியிருக்கிறார் முக்கியமாக " அனுதினம் சாதாரணமாக நிகழும் பல்வேறு செயல்கள் எவ்வாறு குழந்தைகளின் மனதை பாதிக்கிறது" என்று கூறியிருக்கும் உதாரணங்கள் மிக அருமை! தியான முறைகளைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு அவர் கூறும் வாழ்வியல் தொடர்பான தகவல்கள் சுவாரசியமாகவும் சுய அனுபவங்களோடு ஒப்பீடு செய்து கொள்ளவும...

பூரண உள்ளொளி கண்டடைதல் Book Review

Image
On Women's Day, I had the opportunity to read a short booklet (spanning just 20 pages) titled "Attaining Complete Inner Illumination," written and published by one of our own—Mrs. Radha Parasuram. In the preface, the author begins by sharing her own profound experiences while striving to focus her mind; she further piques our interest by highlighting the works of authors such as Keith Miller and Michael A. Singer. In the pages that follow, the author provides a detailed account of "how she embarked on her meditation journey, the challenges she encountered, and how she subsequently achieved success by adopting various different techniques." Interspersed throughout this narrative, she also touches upon the diverse challenges we face in our daily lives—most notably, the examples she cites regarding "how various ordinary, everyday occurrences impact the minds of children" are truly excellent! For someone like me—who possessed absolutely no prior introducti...

இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்

Image
சூரபத்மனை முருகன் வென்ற இடமாதலால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் "ஜெயந்திபுரம்" "வீரவாகு பட்டினம்" என்றும் அலைகள் சீராக கரையை வந்து மோதுவதால் "சீரலைவாய்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தென்னாட்டு முருகன் கோயில்களிலேயே மிகப்பெரியதான செந்திலம்பதி கடலை அடுத்த சந்தனமலையில் உருவாக்கப்பட்டது. "கந்தமாதன பர்வதம்" என்றும் இதைச் சொல்வார்கள். சிவனை நோக்கி தவமிருக்கும் கோலம் என்பதால் செந்தூரனுக்கு கையில் வேல் இல்லை எனினும் சில நாட்களில் வேல் சாத்துவதுண்டு. இந்த முருகனின் பாதத்திலிருந்து பெறும் பத்ர விபூதி விஷேஷம் வாய்ந்தது இதை உட்கொண்ட விஷ்வாமித்ரரின் வியாதி குணமடைந்த விவரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ நிற்கும் இந்த பாலசுப்ரமணியன் தான் இதே தலத்தில் ஒரு மாபெரும் சேனையை திரட்டி யுத்தமும் செய்திருக்கிறான். சூரபத்மனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகனை வழிமறித்த தாரகாசுரனையும் அவனுக்கு துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு முருகன் தன் படையோடு தேவசேனாதிபதியாக திருச்செந்தூர் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கிருந்...

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

Image
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதங்களில் ஒன்று தை மாதம். இம்மாதத்தில் அனைத்து முருகத்தலங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இந்நன்னாளில் பலரும்  நன்கறிந்த ஆறு படை வீடுகளைப் பற்றி பரவலாக அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்வோமா?! ஆறுபடை வீடுகள்  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  இரண்டாம்  படை வீடு - திருச்செந்தூர்  மூன்றாம் படை வீடு - பழனி  நான்காம்  படை வீடு - சுவாமி மலை  ஐந்தாம் படை வீடு - திருத்தணி  ஆறாம் படை வீடு - பழமுதிர் சோலை  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  திருமாலின் இரு கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் முருகனின் அழகில் மயங்கி அவனையே மணமுடிக்க வேண்டுமென்று தவமிருந்தனர் அவர்களுள் அமிர்தவல்லி தேவேந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் பிறந்தாள். சூரபத்மனை வென்று தேவர்கள் சேனைக்கு அதிபதியான முருகன் தேவசேனைக்கும் அதிபதியாகி பங்குனி உத்திரத்தன்று  மணம் கொண்ட தலம் திருப்பரங்குன்றம். அங்குள்ள கோவில் தேவதச்சனால் கட்டப்பட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. குடவறை...

கூடாரவல்லி திருநாள்

Image
மார்கழி மாதம் - மாதவன் நாமம் ஒலிக்காத இடங்கள் உண்டோ?!  பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதனை நினைத்து ஆண்டாள் " திருப்பாவை " பாடியதும் இம்மாதத்தில் தான். பன்னிரு ஆழ்வார்களில் ஓரே ஒரு பெண் ஆழ்வார் என்ற புகழையும் பெருமையையும் பெற்ற கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் சன்னதியின் தோட்டத்தில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில்  பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே கண்ணனிடம் தீராப் பற்று கொண்ட கோதை, பெருமாள் அணிய வேண்டிய மலர் மாலையை தான் அணிந்து அவருக்களித்து "சூடிக்கொடுத்த சுடர் கொடி " ஆனாள். தன்னுடைய இள வயதிலேயே ஸ்ரீனிவாசனை நினைத்து பாசுரங்கள் பாடத் துவங்கினார் கோதை. மார்கழி மாதத்தில் தினமும் ஓர் பாசுரம் என்று அவர் பாடிய முப்பது பாசுரங்கள் "திருப்பாவை " எனப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..." என்னும் பாசுரத்தைப் பாடினார்.  அன்று இரவு தனக்கும் ரங்கநாதருக்கு திருமணம் நடப்பது போன்ற கனவினைக் கண்டார். தனது கனவு நனவாகும் தருணத்தை எண்ணிக் காத்திருந்தார். காலங்கள் கடந்தன. பெரியாழ்வார் தன் ம...

ராமனின் சௌந்தர்யமும் தண்டாபூபிகா நியாயமும்

Image
உபன்யாசகர் ஒருவர் வால்மீகியும் கம்பரும் ராமனின் அழகை எவ்வாறெல்லாம் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள் என்று உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவனின் திருவழகைக் கண்டு எவ்வாறு ஆண்களெல்லாம் சொக்கி விழுந்தனர் என்று கூறிய அவரிடம் "என்ன சுவாமி ஆண்கள் மட்டும் தான் அவன் அழகில் மயங்கினரா?! பெண்கள் மயங்கவில்லையா?!" என்று ஒருவர் கேட்க அதற்கு உபாசகர் "அது தண்டாபூபிகா நியாயேன சித்தமல்லவா" என்று கூறிவிட்டார். கேள்வி கேட்டவருக்கு எதுவும் புரியவில்லை. நமக்கும் தானே?! ஏகாதேசியன்று விரதம் இருக்கும் அனைவர் வீட்டிலும் சமைக்கப்படும் ஒரே பதார்த்தம் "உப்புமா". ஏன் அவ்வாறு என்பதற்கு ஒரு கதை. ருக்மாங்கதன் என்னும் அரசன் ஏகாதேசி திதியன்று தவறாமல் விரதம் இருந்து வைகுண்ட ப்ராப்தி அடைந்தான்.  விரதம் இருக்கும் அனைவருக்கும் அவ்வரத்தை அளிக்குமாறு திருமாலிடம் வேண்டிக்கொண்டான் இதனால் பூலோகத்தில் பாப தேவதைகளுக்கே இடமில்லாமல் போய் விட்டது. பிரம்மாவிடம் சென்று முறையிட்ட தேவதைகளிடம் "முழு அரிசியில் சென்று ஒளிந்து கொள்ளுங்கள்" ஏகதேசியன்று முழு அரிசியை உட்கொள்ளும் அனைவரையும் பிடித்துக் கொள் ...

தசள்

பெரும்பாலான சௌராஷ்டிரா குடும்பங்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில்  ஏழுமலையானை வணங்கி அசைவ உணவுகளை விலக்கி,  விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. அதே மாதத்தில்   ஏதேனும் ஒரு  சனிக்கிழமையில் ...கோவிந்தா ...கோவிந்தா என்ற நாமத்தை ஒரு சேர எழுப்பி அவன் பெயரில்   வழங்கப்படும் அன்னதானமே "தசள் " என்ற பெயரால் அறியப்படுகிறது. "தசள்" எப்போது எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெரியவர்களிடம் (70 வயது ) கேட்டபோது " இது தொன்று தொட்டு வரும் வழக்கம்" என்றும் தங்களின் மூதாதையர் காலங்களிலும் (1800-களில்)  தசல்  இருந்ததாக கூறப்பட்டது . ஒரு சிலர் குடும்ப செழுமைக்காக பரந்தாமனை வேண்டி  புதிதாக துவங்கும் பழக்கமும் உண்டு என்றும்  கூறுகின்றனர்.  மாதம் மும்மாரி பொழிந்த பண்டைய காலத்தில்  ஆவணி புரட்டாசி மாதங்களில்  மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். மழை நீரால் சூழப்பட்ட நிலங்களில் விவசாயம் தடைபட்டதால் வயலில்  கூலி வேலை செய்யும் விவசாயிகளும் இன்ன பிற கூலி வேலை செய்பவர்களும் உண்பதிற்க...