இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்
சூரபத்மனை முருகன் வென்ற இடமாதலால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் "ஜெயந்திபுரம்" "வீரவாகு பட்டினம்" என்றும் அலைகள் சீராக கரையை வந்து மோதுவதால் "சீரலைவாய்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தென்னாட்டு முருகன் கோயில்களிலேயே மிகப்பெரியதான செந்திலம்பதி கடலை அடுத்த சந்தனமலையில் உருவாக்கப்பட்டது. "கந்தமாதன பர்வதம்" என்றும் இதைச் சொல்வார்கள். சிவனை நோக்கி தவமிருக்கும் கோலம் என்பதால் செந்தூரனுக்கு கையில் வேல் இல்லை எனினும் சில நாட்களில் வேல் சாத்துவதுண்டு. இந்த முருகனின் பாதத்திலிருந்து பெறும் பத்ர விபூதி விஷேஷம் வாய்ந்தது இதை உட்கொண்ட விஷ்வாமித்ரரின் வியாதி குணமடைந்த விவரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ நிற்கும் இந்த பாலசுப்ரமணியன் தான் இதே தலத்தில் ஒரு மாபெரும் சேனையை திரட்டி யுத்தமும் செய்திருக்கிறான். சூரபத்மனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகனை வழிமறித்த தாரகாசுரனையும் அவனுக்கு துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு முருகன் தன் படையோடு தேவசேனாதிபதியாக திருச்செந்தூர் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கிருந்...