Posts

Showing posts from January, 2026

இரண்டாம் படை வீடு - திருச்செந்தூர்

Image
சூரபத்மனை முருகன் வென்ற இடமாதலால் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் "ஜெயந்திபுரம்" "வீரவாகு பட்டினம்" என்றும் அலைகள் சீராக கரையை வந்து மோதுவதால் "சீரலைவாய்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தென்னாட்டு முருகன் கோயில்களிலேயே மிகப்பெரியதான செந்திலம்பதி கடலை அடுத்த சந்தனமலையில் உருவாக்கப்பட்டது. "கந்தமாதன பர்வதம்" என்றும் இதைச் சொல்வார்கள். சிவனை நோக்கி தவமிருக்கும் கோலம் என்பதால் செந்தூரனுக்கு கையில் வேல் இல்லை எனினும் சில நாட்களில் வேல் சாத்துவதுண்டு. இந்த முருகனின் பாதத்திலிருந்து பெறும் பத்ர விபூதி விஷேஷம் வாய்ந்தது இதை உட்கொண்ட விஷ்வாமித்ரரின் வியாதி குணமடைந்த விவரம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முகத்தில் குறுஞ்சிரிப்பு தவழ நிற்கும் இந்த பாலசுப்ரமணியன் தான் இதே தலத்தில் ஒரு மாபெரும் சேனையை திரட்டி யுத்தமும் செய்திருக்கிறான். சூரபத்மனை அழிப்பதற்காக புறப்பட்ட முருகனை வழிமறித்த தாரகாசுரனையும் அவனுக்கு துணை நின்ற கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு முருகன் தன் படையோடு தேவசேனாதிபதியாக திருச்செந்தூர் வந்து தங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கிருந்...

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

Image
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதங்களில் ஒன்று தை மாதம். இம்மாதத்தில் அனைத்து முருகத்தலங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இந்நன்னாளில் பலரும்  நன்கறிந்த ஆறு படை வீடுகளைப் பற்றி பரவலாக அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்வோமா?! ஆறுபடை வீடுகள்  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  இரண்டாம்  படை வீடு - திருச்செந்தூர்  மூன்றாம் படை வீடு - பழனி  நான்காம்  படை வீடு - சுவாமி மலை  ஐந்தாம் படை வீடு - திருத்தணி  ஆறாம் படை வீடு - பழமுதிர் சோலை  முதல் படை வீடு  - திருப்பரங்குன்றம்  திருமாலின் இரு கண்களில் இருந்து தோன்றிய அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற இரு பெண்கள் முருகனின் அழகில் மயங்கி அவனையே மணமுடிக்க வேண்டுமென்று தவமிருந்தனர் அவர்களுள் அமிர்தவல்லி தேவேந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் பிறந்தாள். சூரபத்மனை வென்று தேவர்கள் சேனைக்கு அதிபதியான முருகன் தேவசேனைக்கும் அதிபதியாகி பங்குனி உத்திரத்தன்று  மணம் கொண்ட தலம் திருப்பரங்குன்றம். அங்குள்ள கோவில் தேவதச்சனால் கட்டப்பட்டதாக கந்தபுராணம் கூறுகிறது. குடவறை...

கூடாரவல்லி திருநாள்

Image
மார்கழி மாதம் - மாதவன் நாமம் ஒலிக்காத இடங்கள் உண்டோ?!  பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ரங்கநாதனை நினைத்து ஆண்டாள் " திருப்பாவை " பாடியதும் இம்மாதத்தில் தான். பன்னிரு ஆழ்வார்களில் ஓரே ஒரு பெண் ஆழ்வார் என்ற புகழையும் பெருமையையும் பெற்ற கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் சன்னதியின் தோட்டத்தில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில்  பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே கண்ணனிடம் தீராப் பற்று கொண்ட கோதை, பெருமாள் அணிய வேண்டிய மலர் மாலையை தான் அணிந்து அவருக்களித்து "சூடிக்கொடுத்த சுடர் கொடி " ஆனாள். தன்னுடைய இள வயதிலேயே ஸ்ரீனிவாசனை நினைத்து பாசுரங்கள் பாடத் துவங்கினார் கோதை. மார்கழி மாதத்தில் தினமும் ஓர் பாசுரம் என்று அவர் பாடிய முப்பது பாசுரங்கள் "திருப்பாவை " எனப்படுகிறது. மார்கழி மாதம் 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..." என்னும் பாசுரத்தைப் பாடினார்.  அன்று இரவு தனக்கும் ரங்கநாதருக்கு திருமணம் நடப்பது போன்ற கனவினைக் கண்டார். தனது கனவு நனவாகும் தருணத்தை எண்ணிக் காத்திருந்தார். காலங்கள் கடந்தன. பெரியாழ்வார் தன் ம...