Posts

Showing posts from January, 2024

அனுமார் ஜெயந்தி - ஜனவரி 11, 2024

Image
அன்று அயோத்தி ராஜ சபையில் தனது குருக்களான வசிஷ்டர், விஷ்வாமித்ரர் உடனுறைய தனது சகோதரர்கள், அமைச்சர்கள் புடை சூழ ராஜ பரிபாலனம் செய்து கொண்டிருந்தார் அரசர் ராம சந்திரமூர்த்தி. அப்போது அவரைக்கான வந்த காசி நாட்டரசர் அனைவருக்கும் உரித்தான மரியாதைகளையும் வணக்கங்களையும்  தனித்தனியாக தெரிவித்தவன் விஷ்வாமித்ரரை மட்டும் பொதுவாக வணங்கிவிட்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டான். ராஜசபையும் தொடர்ந்தது. அச்சபையில் வீற்றிருந்த தேவ ரிஷி நாரதர் அமைதியாக இருந்த  விஷ்வாமித்ரரிடம் காசி நாட்டரசன் செய்த காரியத்தை மிகப் பெரிய தவறு என்று சுட்டிக் காட்டி கலகத்தை துவக்கி வைத்தார். காசி நாட்டரசனின் செய்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த விஷ்வாமித்ரர் நாரதரின் விளக்கத்தைக் கேட்டு பெரும் கோபம் அடைந்தார். அரசரும் தனது மாணவனும் ஆகிய ராகவ ராமனிடம் "எனக்கு குருதட்சணையாக அந்த மரியாதை கெட்டவனின் தலையை கொண்டு வா" என்று ஆணை இட்டார். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த காசி அரசன் அனுமனின் தாயாகிய அஞ்சனையிடம் அடைக்கலம் அடைந்தான். அனுமனை அழைத்த தாய் நடந்த விடயங்களை கூறாமல் காசி அரசன் ஆபத்தில் உள்ளான் என்றும் அ...

சிறை மீட்ட செல்வன்

அசோகவனத்தில் அடைபட்டிருந்த சீதையின் முன் ராம தூதனாக நின்ற அனுமனை விலங்கிட்டு ராவணனின் முன் நிறுத்தினர் காவல் வீரர்கள் . பழத்தோட்டத்தை துவம்சம் செய்த வாணரத்திற்கு என்ன தண்டனை வழங்கலாம்?!  என பலவாறு விவாதிக்கப்பட்டது . அதன் வாலில் எண்ணைத் துணியைக் கட்டி தீ வைத்து  விடுவதுதான் பொருத்தமான தண்டனையாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது . வாலில் கொழுந்துவிட்டு எரியும் தழலுடன் அரண்மனையிலிருந்து குதித்த அனுமான்  மரத்திற்கு மரம், சுவருக்கு சுவர் என தாவினார் நீரைத்தேடி. வாணரம் ஆயிற்றே !!! இலங்கை கொழுந்து விட்டு எரிந்தது . அரக்கிகளின் மூலம் விஷயமறிந்த சீதையோ அனுமனை நெருப்பிலிருந்து காக்க   அக்னி தேவனை  பிரார்தனை செய்து கொண்டாள்.   " வாயு புத்திரரே எங்களைக் காப்பாற்றுங்கள்...எங்களை விடுவியுங்கள் " என்ற அபயக் குரல் துள்ளி ஓடிய  அனுமனின் காதுகளைத் துளைத்தது . இடைவிடாது ஒலித்த அவ்வொலியை தொடர்ந்த அனுமனால் அது எங்கிருந்து வருகிறது என்று யூகிக்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில் " அனுமரே நாங்கள் இவ்வரண்மனையின் பாதாள சிறையில் அடைபட்டிருக்கி...

அனுமார் ஜெயந்தி

பொன்னிற்கரசன் குபேரனின் அவையில் இருக்கும் அப்சரஸ்களில் ஒருவளான  புஞ்சஸ்தலா தேவலோகத்திற்கு வருகை தந்திருக்கும் துருவாச முனிக்கு பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டாள். கோபத்திற்கு பெயர்போன துருவாசரிடம் மிகவும் கவனமாக தனக்கிடப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தாள்  புஞ்சஸ்தலா. எதிர்பாரா விதமாக யாகத்திற்காக அவள்  கைகளில் வைத்திருந்த  அரணிக்கட்டைகளில் ஒன்று கீழே விழ அவ்வொலியை பொறுக்க முடியாத துருவாச முனி " மந்தியைப் போல் சுய கட்டுப்பாடற்று வேலை  செய்கிறாயே?! நீ பூலோகத்தில் வானர  குடும்பத்தில் பிறக்கக் கடவாய் " என்று சபித்து விட்டார். அறியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?! என்று கதறி அழுதாள் புஞ்சஸ்தலா. குபேரனும் தன் அவையில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். தனக்கு சாபவிமோசனமே கிடையாதா?! என்று கலங்கி நின்ற புஞ்சஸ்தலாவிடம்  " கவலை கொள்ளாதே... வானர ரூபத்தில் நீ ஓர் ஆண் மகனை ஈன்றெடுப்பாய்...அவன் பூலோகத்தில் அவதரிக்க இருக்கும் பாற்கடல் வாசனுக்கு அன்புக்குரியவனாவான்... நீயும் சாப விமோசனம் பெறுவாய் " என்று உறுதி அளித்த...