Posts

Showing posts from September, 2022

புரட்டாசி மாத சிறப்புக் கட்டுரை # 2 - சிபாரிசு

Image
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் வைகுந்தத்தில் வீற்றிருந்தார் அப்போது  பக்தன் ஒருவன்  அவரை  காண வந்தான் ஆனால் அவனின் கர்ம வினைகளை அறிந்த பரமனோ அவனைக் காண உளம் கொள்ளவில்லை ஆதலால் தலையை வலப்பக்கமாக திருப்பிக் கொண்டான். அப்பக்கம் அமர்ந்திருந்த ஸ்ரீதேவியோ "பக்தன் வேண்டுவதை கவனியாமல் ஏன் இப்பக்கம் திரும்புகிறீர்கள்" என்று அவரின் முகத்தை பக்தனை நோக்கித் திருப்பினார். இப்பொது விஷ்ணுவோ தனது முகத்தை இடப்பக்கமாக திருப்பிக் கொள்ள அங்கு வாசம் செய்யும் பூதேவியும் "பக்தனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று தலையை சரி செய்து விட முடிவாக ஸ்ரீ ஹரி தனது தலையை முற்றிலும் மறுபக்கம் சுழற்றி பின் புறத்திற்கு இட்டுச் செல்ல அங்கு குடி கொண்டிருக்கும் நீலா தேவி தன் பங்கிற்கு பக்தனுக்காக சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல்  தனது பக்தனுக்கு செவி சாய்க்கிறார் அச்சுதன். தேய்ந்து வளரும் நிலவினை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வது போல ஒரு தாய் தன் குழந்தை எவ்வித தவறு செய்திருப்பினும் அதனிடம் பாரா முகம் கொள்வதில்லை என்பதையே தேவிகள் பக்தனுக்காக ஸ்ரீனிவாசனிடம் பரிந்துரை செய்...

புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரை 1 - வேதாந்த தேசிகர்

Image
நாராயணனை மனதால் நினைப்பதற்கும் அவனின் நாமங்களைக் கூறுவதற்கும் நாள், கிழமை, மாதம் பார்க்கத் தேவையில்லை எனினும் வைகுந்தன் இம்மண்ணில் அவதரித்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால் இம்மாதத்தில் பல்வேறு விரதங்களை நாம் கடைபிடிக்கிறோம் அத்தோடு  நின்று விடாமல் அவனை நினைவில் நிறைத்தும் அவனின் நாமங்களைக் கூறியும் பிரார்த்தனை செய்வோம். நமக்குத் தெரிந்த நாராயணன் கதைகளையும் லீலைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். நானும் அவ்வகையில் புரட்டாசி மாதச் சிறப்புக் கட்டுரைகள்  (வாய் வழிக் கதைகள்) சிலவற்றை எழுதலாம் என்றிருக்கிறேன். வாசித்து உங்களுடைய வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான  வேதாந்த தேசிகர் 13-14-ம்  நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் மட்டுமல்லாது இலக்கியம், அறிவியல், கணிதம், வேதாந்தம்  என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.   வேதாந்த தேசிகரின் தந்தை ஒரு ஞானி. தாயை இழந்த மகனை காக்கும் பொறுப்பினால் லௌதீக வாழ்க்கையில் கட்டுண்டு கிடந்தார். தன்னுடைய நிலையை எண்ணியவாறு அமர்ந்திருந்த அவர் எதிர...

யார் இந்த வித்யாவலி? - ஓணம் சிறப்புக் கட்டுரை

Image
கேரள மக்களின் ப்ரத்யேகப் பண்டிகையான "ஓணம் விழா" இன்று உலகெங்கும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் உடுத்தி, மலர்க்கோலம் இட்டு, அறுசுவை உணவுகள் சமைத்து வருடத்திற்கு ஒரு முறை பாதாள லோகத்தில் இருந்து பூலோகம் வரும் மகாபலியை வரவேற்கிறார்கள். பிரகலாதனின் பேரனும் இரண்யகசிபுவின் வழித்தோன்றலுமாகிய மகாபலி ஏன் பாதாள உலகத்திற்கு அரசன் ஆனான் என்பது நாம் அறிந்த ஒன்று. சப்த ரிஷிகளில் ஒருவரான காஸ்யபருக்கும் அதிதி அன்னைக்கும் மகனாக அவதரிக்கிறார் மஹா விஷ்ணு. அவரின் உயரம் காரணமாக வாமணன் என்று அழைக்கப்படும் அவருக்கு ஓர் மங்களமான நாளில் உபநயனம் செய்யப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் இந்நிகழ்வினைக் காண பூலோகம் வருவதோடு தங்களது அஸ்திரங்கள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணமாக்கி வணங்குகிறார்கள். அசுரர் குல அரசன் மஹாபலி யாகம் ஒன்றை நடத்துகிறான். அதன் முடிவில் பிராமணர்களுக்கு அவர்கள்  வேண்டியதை தானமாக வழங்குகிறான் என்பதை அறிந்த வாமணன் பனைக்குடை, கமண்டலம் மற்றும் தண்டம் ஏந்தி மான்தோல் ஆடை அணிந்து அங்கு செல்கிறான். செல்லும் வழியில் பகவான் விஷ்ணுவின் இட பாகத்தில் அமைந்த லக்ஷ்மி தேவியோ அவர...