Posts

Showing posts from January, 2021

மாரியம்மா.. மாரியம்மா

தை மாதம் என்றாலே சக்தி வழிபாடும் சக்தியிலிருந்து தோன்றிய சண்முகன் வழிபாடும் கோவில்களில் கலை கட்டும். பாத யாத்திரை, பால் குடம் என்று பக்தர்கள் கூட்டம் சரவணனின் கோவில்களில் அலை மோதும் என்றாலும்  தை வெள்ளிக்கிழமைகளில் "தாயே..நீயே கதி"  என்று தாய்மார்கள் கூடுவது அம்மன் சன்னதிகளில் தான் குறிப்பாக மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தை மாதம், தை பூச நாளில் (ஜனவரி 28, 2021)  நடைபெறும் தெப்பத்திருவிழா மிகப்  பிரசித்தி பெற்ற கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.  மாரியம்மா பெயர் காரணம் என்ன? அறிந்து கொள்வோமா? சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஐந்து புத்திரர்களும் இருந்தனர் அவர்களில் கடைசிப் புதல்வன்தான் வீரத்திற்கும் கோபத்திற்கும் பெயர் போன மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்.  அனு தினமும் ஆற்றங்கரைக்குச் செல்லும் ரேணுகாதேவி அங்குள்ள ஈர களிமண்ணில் குடம் வடித்து  அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு திரும்புவது வழக்கம். பதி விரதத்தால் அவள் பெற்ற சக்தியே இதை சாத்தியமாகியது. ஓர் நாள் அவ்வாறு குடம் செய்து கொண்டிருக்கையில் வானத்...

திருவூடல் திருவிழா

Image
திருவண்ணாமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது சுவாமி அண்ணாமலை குடிகொண்டிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலும் அங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களான கார்த்திகை பெருந் தீபமும் கிரி வலமும் தான் ஆனால் ஒவ்வொரு வருடமும் தை மாத பிறப்பான பொங்கல் விழாவை அடுத்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று கணவன் மனைவியின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் "திருவூடல் திருவிழா" நடைபெற்று வருகிறது. இந்நாளில் அண்ணாமலையாரும்  உண்ணாமலை அம்மனும் தம்பதி சமேதராக நந்தி தேவருக்கு காட்சி அளித்துவிட்டு சித்தி வாசல் வழியாக வெளி வந்து சூரிய பகவானுக்கு தரிசனம் அளிப்பார்கள். சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக்  குறிக்கும் விதமாக இருவரும் மாட வீதியை மூன்று முறை சுற்றி வருவார்கள். அன்று மாலை சிவனும் பார்வதியும் திருவூடல் வீதியில் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  அம்மை அப்பனுக்குள் அப்படி என்ன ஊடல் என்கிறீர்களா? வாருங்கள் அதன் பின்புலத்தை அறிந்து கொள்வோம். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் ஏன் பார்வதி தேவியைக் கூட வழிபட மறுப்பவர் பிருங்கி முனிவர் .ஓர் முறை முனிவர்களும் ரிஷிகளும் பார்வதி பரமேஸ்வரனை சுற்றி வழிபட்டுக் கொண்டிருக்க...

அஷ்டமி சப்பரம் 01 - 06 - 2021

ஓர் சமயம்   பூலோகத்தில் வாழும் சகல ஜீவ ராசிகளுக்கும் படி அளக்கும் நோக்குடன் பூமிக்கு செல்லவிருந்த  கைலாயநாதரிடம் அன்னை பார்வதி "இன்று படி அளக்கும் நாளல்லவா?!" என்று வினவினாள். ஆம் என்று பதிலளித்த சிவ பெருமானிடம்  "அனைவருக்கும் படி அளந்து விடுவீர்களா?! ஒருவரையும் விட்டுவிடாமல்?!" என்று கேள்வி எழுப்ப "இதிலென்ன சந்தேகம்...இன்றைய நாளின் சிறப்பே அதுதானே" என்று கூறிவிட்டு சென்ற மஹேஸ்வரனுக்குத்  தெரியாமல் அன்னை உமா தேவி ஓர் எறும்பை பிடித்து சிறு சிமிழில் வைத்து அடைத்து விட்டாள்.  பூலோகத்தில் இருந்து திரும்பிய அய்யனிடம் " அனைவருக்கும் வேண்டிய வரங்களை அளித்து படி அளந்து விட்டீர்களா?!" என்று கேட்டாள் அன்னை. " ஆம்" என்று கூறிய சிவ பெருமானிடம் " இல்லை நீங்கள் ஓர் உயிருக்கு மட்டும் படி அளிக்கவில்லை" என்று கூறி சிமிழைத் திறக்க... அச்சிறு எறும்பின் வாயிலும் ஓர்  அரிசி மணி இருக்கக் கண்டு அதிசயித்து போனாள் சக்தி. அண்ணாமலையானின் மகிமையை எண்ணி மெய்சிலிர்த்தாள். இந்நிகழ்வை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி அ...