Posts

Showing posts from March, 2020

கெளரவ பூர்ணிமா - மார்ச் 9 , 2020

மாசி மாத பவுர்ணமிக்கு ஹோலிப் பண்டிகை, கஜேந்திர மோக்ஷம் என்று பல சிறப்புக்கள் உண்டு அவற்றில் ஒன்று ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்த தினம் ஆகும். பொன் போன்று  மின்னும் மேனி அழகால்  கௌரங்கா என்றும் அழைக்கப்பட்டார் ஆதலால் இத்தினம் கௌரவ பூர்ணிமா என்றும்  அழைக்கப்படுகிறது. உலகெங்கும் அவரது பிறந்த தினம் குறிப்பாக ISKON அமைப்புகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பாவத்தை நீக்க எளிய வழி என்று எதைக் கூறுகிறார் என்பதை அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தின் மூலம்  பின் வருமாறு காணலாம். ஸ்ரீ சைதன்யரின் வட இந்திய யாத்திரையின் போது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் காசியை அடைந்தார். மணிகர்னிகா  கட்டி-ல் (Manikarnika Ghat) அவர் கங்கையில் ஸ்நானம் செய்தார்.கிழக்கு வங்காள சுற்றுப்பிராயணத்தின் போது தன்னிடம் உபதேசம் பெற்று, தனது யோசனையின் படி காசியில் வசிக்கும் தவள மித்ரரை ஸ்ரீ சைதன்யர் சந்தித்தார். அவருடைய துணையுடன் சைதன்யர் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் பிந்து மாதவர் சன்னதிக்கும் சென்றார். பின்னர் அவருடைய வீட்டிலேயே தங்கினார். பிற்காலத்தில் ரகுநாத பட்...

கஜேந்திர மோக்ஷம் - மார்ச் 9, 2020

விஷ்ணுவின் பால் அதி பக்தி கொண்ட  கஜேந்திரா என்னும் யானை இமயமலைச் சாரலில் வாழ்ந்து வந்தது. அனுதினமும் அருகிலுள்ள குளத்திலிருந்து  அங்குள்ள விஷ்ணு கோவிலுக்கு தாமரை மலர்களை பூஜைக்காக  எடுத்துச்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அன்றும் மலர்களை பறிப்பதற்காக, இருள் செறிந்த அதிகாலையில் குளக்கரைக்கு  சென்றது. மலர்களை பறித்துக் கொண்டிருக்கையில் அதனுடைய கால்களை ஓர் முதலை கவ்வ வலி பொறுக்காமல் கதறியது கஜேந்திரா. முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பலவாறு முயன்றது. உதவிக்கு பிறரை அழைக்கும் பொருட்டு சத்தமாக பிளிறியது. பல மணி நேர முயற்சி பலனளிக்கவில்லை இறுதியில் தனது தும்பிக்கையில் இருக்கும் தாமரைப் பூவை வானை நோக்கி ஏந்தியவாறு முழு நம்பிக்கையுடன் "ஆதி மூலா", "நாராயணா ", "கோவிந்தா "என்று அழைக்கத் துவங்கியது. இனி எனக்கு நீ அன்றி வேறு எவரும் இல்லை, உன்னையே சரணடைகிறேன். இச்சூழலில் இருந்து என்னை காப்பாயாக என்று பிரார்த்தனை செய்தது. தனது பக்தனாகிய கஜேந்திராவை முதலையின் பிடியிலிருந்து காக்கும் பொருட்டு காட்சி அளித்த பரந்தாமன், சுதர்சன சக்கரத்தை முதலையி...

பிரதோஷ விரதம் ஏன் அனுஷ்டிக்கப்படுகிறது ?!

தேவர்களும் அசுரர்களும் இணைந்து, வாசுகி என்ற பாம்பைக் கொண்டு விஷ்ணுவின் தலைமையில்   பாற்கடலைக்  கடைந்தனர். அமிர்தத்தை அடையும் நோக்கில் தொடங்கப்பட்ட  இச்செயலில், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருட்களை இரு தரப்பினரும்  தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எதிர்பாரா விதமாக வாசுகியிடம் இருந்து வெளிவந்த ஆலகால விஷம், பாற்கடலின் பல்வேறு அசுத்தங்களோடு இணைந்து பெருந்தீயாக உருமாறி தாண்டவமாடியது. விஷ்ணுவும் பிரம்மாவும் தீயை அணைக்க முயன்று தோற்ற பின் ருத்ரதாரியான  சிவபெருமானின் உதவியை நாடினர். பெருந்தீயோடு ஆலகால விஷத்தையும் ஒரே மடக்கில் விழுங்கிய சிவபெருமானைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் கைகூப்பித் தொழுதனர். பார்வதியோ விஷம் சிவபெருமானின்  வயிற்றை அடையாதவாறு  தொண்டையை அழுந்தப் பிடித்து நிறுத்தினார். அதனால் அண்ட சராசரத்தில் வாழும் அனைத்து உயிர்களும் காக்கப்பட்டன. விஷத்தின் வீரியத்தால் சிவபெருமான் தன் நினைவை இழந்து மயக்க நிலையை அடைந்தார். அச்சமயம் சிவபெருமானை நோக்கி வைக்கப்பட்ட பிரார்த்தனைகளையும் வேண்டுகோள்களையும் சிவனின் வாகனமா...