Posts

Showing posts from May, 2019

சுக்கிரன்/ வெள்ளி

சுக்கிரன் என்றதும் நம் நினைவிற்கு வருவது சுக்கிர திசை தான். அதிர்ஷ்டம் நம் பக்கம் என்று எண்ண வைக்கும் இக்கிரகத்திற்கு அதிபதியானவர் சுக்ராச்சாரியார். நவகிரகங்களில் சந்திரனுக்கும் புதனுக்கும் நடுவே அமர்ந்திருக்கும் இவரை  வெள்ளி என்றும் அழைக்கின்றோம். இத்திசையில் பிறந்தோர் ஞானம் மிக்கவர்களாக இருப்பர் என்றும் இக்கிரகத்தின் பார்வை நம்மேல் படுமாயின் வாழ்வில் வளம் கூடும் என்றும்  நம்பப்படுகிறது . இனி சுக்கிரனின் கதையைப் பார்ப்போமா?! சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகுவிற்கும் பிருதைக்கும் மகனாகப் பிறந்தவர் சுக்ராச்சாரியார். ஓர் நாள் தன் தந்தையுடன் வேதம் கற்கச் சென்றிருந்தார். குடிலில் தனித்திருந்த பிருதையிடம் அடைக்கலம் அடைந்தனர் தேவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்த அசுரர்கள். அவர்களை தன்னிடம் ஒப்படைக்க கூறி பிருதையிடம் முறையிட்டான் இந்திரன். "தாயான நான் என்னிடம் தஞ்சம் அடைந்தவர்களைக்  கைவிட முடியாது" என்று பிருதை மறுத்து விட இந்திரன் காக்கும் கடவுள் ஹரியை அழைத்து வந்தான். அரக்கர்களை காத்த பிருதை  சுதர்சன சக்கரத்திற்கு பலியானாள். இதைக் கண்ட பிருகு முனி விண்ணளந...

யோக நரசிம்மர் - நரசிம்மர் ஜெயந்தி - மே 17, 2019

சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்தியர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை நரசிம்ம அவதாரத்தில் காண விருப்பம் கொண்டார். அதன் பொருட்டு அடர்ந்த காட்டிலுள்ள குன்றின் மேல் அமர்ந்து தவமியற்றத் துவங்கினார். அவ்வனத்தில் வசித்த மலை வேடன் ஒருவன் அவருக்காக கனிகளை பறித்து வந்து அவர் முன் வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தவத்தில் மூழ்கியிருந்த புலஸ்தியரோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை. ஓர் நாள் தவத்திலிருந்து விழித்துக் கொண்ட புலஸ்தியரை  கண்ட வேடன் அவர் முன் வணங்கி "உங்கள பார்த்தா பெரிய சாமி மாதிரி தெரியுறீங்க...ரொம்ப நாளா இங்க எதுக்குயா உக்காந்து சாமி கும்புறீங்க?!" என்று தனது அறியாமையையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தினான். கனிவே வடிவாகிய புலஸ்தியரோ ஆழிவண்ணனின் நரசிம்ம வடிவத்தைக் காணும் பொருட்டே அங்கு தவத்தில் ஈடுபட்டுள்ளதாக விளக்கிக் கூறினார். குரு உபதேசம் போல் அவர் உரைத்ததைக்  கேட்டறிந்த வேடன் "அப்பிடியா ?!...நாம கூப்புட்டா சாமி வருமா?!" என்று அதிசயித்தான். சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர் கடவுளா?! என்று ஆச்சர்யம் கொண்டான். "சாமி நான் இந்த கா...

ராகு கேது

ராகு காலம், ராகு கேது பெயர்ச்சி , அதன் பலன்கள் பரிகாரங்கள் என்று நவகிரகங்களில் சனிக்கு வலம் இடமாக அமர்ந்திருக்கும் ராகு கேதுவை அறிந்திருக்கிறோம். ஆனால் ராகுவின் பின்புலம்  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ?! அறிந்துகொள்வோமா!!! மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் நாகத்தை கயிறாவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கவும் அதை உண்டு இறவாநிலையை  அடையவும் தேவர்களும் அசுரர்களும் விண்ணளந்தோனின் தலைமையில் முடிவெடுத்தனர். விஷ்ணு தன்னை கூர்மமாக மாற்றிக்கொண்டு தன் மேல் மந்திர மலையைத் தாங்கிக்கொள்ள கடைதல் தொடங்கியது. பல்வேறு அரிய பொருட்கள் பார்கடலில் இருந்து வெளிவந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட லக்ஷ்மியை மகாவிஷ்ணு தன் நெஞ்சில் ஏந்தி தாரமாக ஏற்றுக்கொண்டார். அந்நாள் பங்குனி உத்திரமாக கொண்டாடப்பட்டது. கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் என்று வெளிவந்த அனைத்தையும் தேவர்களே சொந்தமாக்கிக்கொள்ள அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர் ஆனால் அமிர்தத்திற்காக பொறுத்துக்கொண்டனர். நஞ்சை சடைமுடியான் விழுங்கி அகிலத்தைக் காக்க கடைசியில் அமிர்தம் வெளிப்பட்டது. எங்கே தேவர்கள் இதையும் அபகரித்து விடுவ...