Posts

Showing posts from March, 2019

குரு பூர்ணிமா

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பாரதத்தின் சமய பாரம்பரியத்தில் ஒரு முக்கிய, தனித்துவமிக்க இடம் பெற்றவராகத் திகழ்ந்தார். வேத காலத்திலிருந்து பக்தி தத்துவம் பல சிறந்த  மகான்கள் அறிந்து பின்பற்றிய ஒன்று. ஆயினும் ஸ்ரீ சைதன்யரே பக்தி மார்கத்திற்கு ஒரு முக்கிய இடத்தை அளித்தவர். அதற்கு தனிப்பட்ட மகத்துவத்தை  அளித்து ஆன்மிக தத்துவத்தை முழுமையாகவும்  ஆக்கியவரும் அவரே. அவர் இறைவனிடத்தான தூய அன்பை பக்தி மார்க்கத்தின் மற்ற அம்சங்களிலிருந்து பிரித்து போதித்தார். எல்லாவற்றையும் இறைவனாக ஏற்கும் ஒரு கருணைமிகு பாதையாக பக்தி மார்க்கத்தை மாற்றியவரும் அவரே!!! அப்பேர்பட்ட சைதன்யருக்கு பிறகு அவரைப்  போல அவருக்கு இணையான மகானாக விளங்கும் ஒருவருக்காக உலகம் பல காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு தோன்றியவரே மாமனித உருவில் பக்தியை உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இது ஒன்றே இருவருக்கும் இடையேயான பொதுவான அம்சம் என்று கூறிவிட முடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் மகாபிரபுவின் அருமையையும் லீலைகளைப் பற்றியும் மிக விரிவாக அறிய முடிகிறது. சைதன்யரைப் பற்றி அவர் கூறாத அத்திய...

சைதன்ய மஹா பிரபு

"ஹரே கிருஷ்ண ...ஹரே கிருஷ்ண    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே   ஹரே ராம ...ஹரே ராம   ராம ராம ஹரே ஹரே " - என்ற நாம ஜெபத்தை இவ்வுலகிற்கு அளித்தவரும் பதினாறாம்  நூற்றாண்டில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என்று பலரால் நம்பப்பட்டவரான "ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு " மேற்கு வங்காளத்தில் "நவப்வீபத் " என்னும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய இயற்பெயர் "விஸ்வம்பர்". மிக இளம் வயதிலேயே ஆன்மிக ஆர்வத்தை வெளிப்படுத்திய விஸ்வம்பர் சமஸ்கிருத புலமை மிக்கவராக இருந்தார் .மகா யோகிகளிடம் காணப்படும் ஒன்பது அடையாளங்களை  அவரிடம் காண முடிந்தது . அவையாவன   1.இலாப நஷ்டத்தைப் பற்றிய கவலை அற்று இருத்தல்  2.கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருத்தல்  3.உலக பற்று அற்று இருத்தல்  4.புகழ்சியை விரும்பாதிருத்தல் 5.கிருஷ்ணரிடம் உறுதியான நம்பிக்கை கொண்டிருத்தல்  6.பகவானின்  நினைவுடன் இருத்தல்  7.ஹரிநாமம் சொல்வதின் ருசியை அறிந்திருத்தல்  8.திவ்ய தேசங்களில் வாழ விருப்பம் கொண்டிருத்தல்   9.தெ...

ஹோலிப் பண்டிகை

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக  " ஹோலிப் பண்டிகை"   உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மாசி  மாத பௌர்ணமியில் மக்கள்  பல வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவியும், இரவில் வீதிகளில் தீ வளர்த்து அதைச் சுற்றி  ஆடிப் பாடியும் இப்பண்டிகை நாளில்  மகிழ்கின்றனர். புராணங்களில் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காகக் கூறப்படும் காரணங்கள் என்ன?! பின்புலக் கதைகள் யாவை?! பார்ப்போமா?!  திரேதா யுகத்தில் வாழ்ந்த அரக்ககுல அரசன்  இரணிய கசிபு தானே கடவுள் என்றும் மறுப்பவர்களை அடக்கியும்  அழித்தும் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு மகனாகப் பிறந்த பிரகலாதனோ  "எங்கும் எதிலும் இருப்பவன் ஹரியே " என்று ஹரி நாமம் பாட , அவன் மேல் கடும் கோபம் கொண்ட இரணியகசிபு அவனைக் கொல்ல பல முறை  முயன்று தோற்ற பின் கடைசியாக தன்னுடைய தங்கையான " ஹோலிகா"- வை வரவழைத்தான். ஹோலிகா அக்னி தேவனின் அருள் பெற்றவள். அனலால் அவளுக்கு அழிவில்லை என்பதால் நகர் மன்றின் நடுவே பெரும் சிதை மூட்டப்பட்டது அதில் ஹோலிகா தன் மடியில் பிரகலாதனை ஏந...