Posts

Showing posts from March, 2024

பங்குனி உத்திரம்

Image
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு மும்மூர்த்திகளின் தலைமையில்  பாற்கடலை கடைய முடிவெடுத்தனர் தேவர்களும் அசுரர்களும். மந்தரமலை சமுத்திரத்தில் நிலையாக நிற்கும் பொருட்டு கூர்மமாக தன்னை மாற்றிக் கொண்ட பரந்தாமன் தன்னுடைய முதுகின் மேல் (ஆமை ஓட்டின்) மந்தர மலையைத் தாங்கிக் கொண்டார். பாற்கடலில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. பாற்கடலில் இருந்து பல்வேறு வஸ்துக்கள் வெளிப்பட்டன அத்தோடு அதிலிருந்து தோன்றினாள் மஹாலக்ஷ்மி. அவரை கரம் பிடித்து தனது நெஞ்சில் அமர்த்தினார் பரந்தாமன். இப்பங்குனி உத்திர நாளில் தான் மஹாலஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார் என்பதால் இந்நாளை "மஹாலக்ஷ்மி ஜெயந்தி" ஆகவும் அனுசரிக்கிறார்கள் அத்தோடு அனைத்து விஷ்ணு தலங்களில் பெருமாளுக்கும் லக்ஷ்மிக்கும் விஷேஷமாக மணவிழா நடைபெறுகிறது. இதே பங்குனி உத்திர நாளிலேயே முருகப்பெருமான் தெய்வானையை கைபிடித்ததாகவும் காஞ்சியில் சிவபெருமான் கௌரியை மணந்ததாகவும், கோதை நாச்சியார் விஷ்ணுவுடன் ஒன்றறக்  கலந்ததாகவும் கூறப்படுகிறது. சுவாமி ஐயப்பனும் இதே ...

மஹா சிவராத்திரி

அரசன் ஹிமவானுக்கும் அரசி மைனாவதிக்கும் மகளாக பூமியில்  அவதரித்தாள்  சக்தி. பார்வதி என்று பெயரிடப்பட்டு அரண்மனையில் வளர்ந்த அவள்  கன்னிப்பருவதை அடைந்ததும் தான் மணக்கப்போகும் மணாளனாக கைலாயம் ஆளும் சிவபெருமானை மனதில் வரித்துக்கொண்டாள். அதன் பொருட்டு மகேஸ்வரனை நோக்கி தவம் செய்ய முடிவுசெய்தாள். தன் மகளிற்காக ஓர் தவக்குடிலை ஹிமவான் அமைக்க அங்கு பார்வதி முக்கண்ணனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யத்துவங்கினாள். தவம் கனிந்தது. தவத்துக்குரியோன் அவள் முன் தோன்றுவதற்குப்  பதிலாக ஓர் சிவயோகி தவக்குடிலை நோக்கி வருவதைக் கண்ட பார்வதி அவரை வணங்கி அவருக்கு வேண்டிய  பணிவிடைகளைச் செய்தாள். பார்வதியின் உபசரிப்புக்களை கனிவுடன் ஏற்றுக்கொண்ட யோகி அவளை நோக்கி சில வினாக்களை எழுப்பினார். " அம்மா நீ விரும்பும் மகேஸ்வரனை நான் அறிவேன். உன் விருப்பம் சரியென்று நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவனிடத்தில் என்ன குறை என்கிறாயா?! நீ கைப்பிடிக்க எண்ணும் அவன் பயங்கரமான பாம்பையே கங்கணமாக கையில் அணிந்திருப்பவன்". "அம்மா நன்றாக சிந்தித்துப் பார். நீ உடுக்கப்போவதோ அன்னப்புள்ளியின் உருவம...