Posts

Showing posts from December, 2023

ஆருத்ரா தரிசனம்

Image
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.  இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்களும் கதைகளும் கூறப்படுகின்றன அவற்றில் அதிகம் சொல்லப் படாத செவி வழியே அறியப்பட்ட   நிகழ்வொன்றினை  இங்கே காண்போம். மாணிக்கவாசகர் ஓர் நாள் தில்லை நடராஜர்  முன் அமர்ந்து திருவாசகத்தை மனதிலிருந்து கூறி கொண்டிருந்தார் அப்போது அங்கே வந்த ஓர் பிராமணர்   "ஐயா இதை நான் சுவடிகளில் எழுதுகிறேனே" என்று கூறுயவாறு திருவாசகத்தை அவர் கூறக்கேட்டு ஓலைகளில் எழுதலானான். திருவாசகத்தை கூறி முடித்த பின் அப்பிராமணனை  தேடிய மாணிக்கவாசகர் அவனை எங்கும் காணாது திகைத்தார். வந்தவர் அவ்வருணாச்சலனாகவே இருக்கக்கூடும் என்று நினைத்தார். சில மணி நேரம்  கழித்து தில்லை நடராஜர் கோவிலின் மாசான படியினில் ஓர் ஓலை கண்டெடுக்கப்பட்டது. அவ்வோலையின் முடிவில் வாதவூரார் கூற பொன்னம்பலத்தான் எழுதியது என்று கையொப்பம் இடப்பட்டிருந்தது. அச்செய்தியைக் கேட்டு கோயில் கருவறைக்கு விரைந்த   மாணிக்கவாசகர் அவ்வோலையில் தான்  கூறிய ...

தாமோதரனும் நீலகண்டனும்

Image
தேவர்கள் விண்ணிலும் மண்ணிலும் சஞ்சரிக்கும் திறன் பெற்றவர்கள். குபேர குமாரர்களான நலகுவேரனும் மணிகிரீவனும்  அன்று பூலோக இன்பத்தில் திளைத்து தங்களை மறந்த நிலையில் இருந்தனர் அப்போது அவ்வழியே வந்த அஷ்ட வக்கிரன் (சிலர் நாரதர் என்று குறிப்பிடுவதும் உண்டு) என்ற மாமுனியை கண்டனர். தன் உடலில் உள்ள அஷட கோணல்களாலே அப்பெயர் பெற்ற அவரின் உடற் குறையைக் கண்டு எள்ளி நகையாடினர் தேவ குமாரர்கள். அவர்களின் கீழ்ச்செயலால் கோபமுற்ற முனிவர் உடலில் இருந்து ஆடை நழுவுவதைக் கூட அறியாமல் நாணமின்றி நின்ற அவர்களை மருத மரங்களாக மாற தீச்சொல்லிட்டார்.  தங்கள் தவற்றை உணர்ந்து  சாபத்திற்கு விமோசனம் வேண்டி நின்ற அவர்களிடம் "விஷ்ணு பகவான்  மானுடனாக அவதரித்து மண்ணிறங்கும் வேளையில்  நீங்கள் உங்களின்  சுய உருவைப் பெற்று தேவலோகம் செல்வீர்கள்" என்று சொல்லிச் சென்றார். அங்கேயே மரங்களாக நின்ற அவர்கள் எவ்வாறு சாபம் நீங்கப் பெற்றனர் என்று பார்ப்போமா? துவாபர யுகத்தில் கார் மேக வண்ணன் கிருஷ்னனாக அவதரித்த பரந்தாமன் குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு லீலைகளை புரிந்தார் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அன்...