Posts

Showing posts from January, 2020

ரத ஸப்தமி - பிப்ரவரி 1, 2020

தை மாத அமாவாசையயை தொடர்ந்து  வரும் ஏழாம் நாள் அஷ்டமி திதியை "ரத ஸப்தமி"- யாக அனுசரிக்கிறோம். இந்நாளில் சூரிய தேவன், ஏழு புரவிகள் பூட்டப்பட்டு ஒற்றை சக்கரத்தால் இயக்கப்படும்  தனது  ரதத்தை அருணன் செலுத்த தெற்கிலிருந்து வட திசை நோக்கி பயணிக்கிறார். இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இன்றிலிருந்து பூமியில் பகல் பொழுது நீண்டு காணப்படுகிறது. இதை உத்ராயணம் என்று அழைக்கிறோம். இதே ரத ஸப்தமி நாளில் தான்  பிரம்ம முகூர்த்தத்தில்  அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மப்  பிதாமகர்- தருமனும் பகவான் கிருஷ்ணரும் உடனிருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையும் சிவ ஸஹஸ்ரநாமத்தையும் சொல்லிய வண்ணம் தன் ஆத்மாவை தனது உடலிலிருந்து விடுவித்துக்கொண்டார். ஆகவே இந்நாள் "பீஷ்மாஷ்டமி" என்றும் அழைக்கப்படுகிறது.   கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மகளாகிய நந்தினி யாகத்திற்குத் தேவையான நெய்யையும் பாலையும் வழங்கும் பொருட்டு வசிஷ்டரின் தவக்குடிலில் வாழ்ந்து வந்தது. அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவாகிய பிரபாசாவின் மனைவி தனக்கு நந்தினி பசு வேண்டும் என்று அதைக் கொண்டு  வர தனது கணவனை அன...

லக்ஷ்மணனின் பெருமை

இலங்கை வேந்தன் இராவணனின் முதல் புதல்வன் மேகநாதன். அனைத்து அசுரர்களைப் போலவே தேவர்களை எதிர்த்து போர் புரிந்தான். இவனிடம் தாக்குப் பிடிக்க முடியாத தேவேந்திரன் இந்திரன் , ஆதிசேஷனின் உதவியுடன் பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அங்கு ஆதிசேஷனின் மகள் சுலோச்சனையின் அழகில் மயங்கி தனது விருப்பத்திற்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினான். இந்திரனின் மறைவிடத்தை  கண்டறிந்த மேகநாதனோ  அவனைத்  தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு இலங்கை நோக்கி விரைந்தான். இராவணனும் மேகநாதனும் இந்திரனை கொல்ல முடிவெடுத்தனர்.  விரைந்து வந்து அவர்களைத் தடுத்த பிரம்ம தேவன் அவ்வாறு செய்வது அறிவீனம் என்றும் அதற்கு பதிலாக அவனுக்கு வேண்டிய வரத்தை தான்  வழங்குவதாகவும் கூறினார். மரணமின்மை வேண்டிய மேகநாதனிடம் அது இயற்ககைக்கு விரோதமானது என்று பிரம்மா  கூற மேகநாதனோ  " சாதாரண மனிதன் எவனொருவன் பதினான்கு ஆண்டுகள்  ஊன், உறக்கம் இன்றி வாழ்கிறானோ, எவனொருவன்   திருமணம் புரிந்தும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கிறானோ அவன் மூலமே தனக்கு மரணம் நிகழ...