Posts

Showing posts from October, 2019

விஜய தசமி

ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று பெரும்பாலான கோவில்களில் உற்சவர்- கையில் வில் அம்புடன் வீதி உலா வருவது, காலம் காலமாக  பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு . அவ்வாறு வரும் உற்சவர் கோவிலுக்கு அருகில் காணப்படும் வன்னி மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உலவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். விஜயதசமி என்றாலே அதர்மத்திற்கெதிரான தர்மத்தின்  வெற்றி, நீதியை நிலைநாட்ட அவதாரங்கள் அரக்கர்களை எதிர்த்து நடத்தும் போர் என்றெல்லாம் அனைவரும் அறிந்திருந்தாலும் உற்சவர் அமர  ஏன் வன்னி மரத்தடியை தெரிவு செய்கிறார்?! அதற்கான பின்புலக் கதை  இதோ ... கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 13 வருடம் காடேக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கடைசி வருடம் தங்கள் சுய அடையாளத்தை துறந்து  அங்காத வாசம் செய்யவேண்டும் . அவர்கள் இருக்கும் இடமோ அவர்களைப் பற்றியோ ஒற்றர்கள் மூலம் அறிய முடியுமானால் அவர்கள் அடுத்த 13 வருடமும் நாடு புகமுடியாது என்று உறுதி செய்யப்பட்டது. கௌரவர்களோ அங்காத வாசத்தில் பாண்வர்களை கண்டிபிடித்தே ஆக வேண்டும் என்று கடும் சதி செய்தனர். அவர்கள் ஒளிந்திர...

நவராத்திரி

வருடந்தோறும் புரட்டாசி அமாவாசையை அடுத்த  ஒன்பது தினங்களில்  இப்புடவிற்கே அன்னையரான   முப்பெரும் தேவியரை வணங்கி வழிபடும் , கொண்டாடப்படும் விழவையே நவராத்திரி என்றழைக்கிறோம். அன்னை துர்கா தேவி மகிஷாசுரனை ஒன்பது நாட்கள் போரிட்டு  வதம் செய்த தினம் என்றும் நிம்பன் குசும்பன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த நாள் என்றும்  ரகுகுல  ராமன் சக்தியை இந்நாட்களில் வழிபட்டு அவள் அளித்த சக்தியால் இராவணனை வதம் செய்தான் ஆதலால் விஜயதசமி என்றும்  பல்வேறு காரணங்களாலும் பெயர்களாலும் நவராத்திரி அறியப்பட்டாலும் "அதர்மத்தை தர்மம் வென்று நீதியை நிலைநாட்டும் நாள் நவராத்திரி " என்பதே மூலக்கருத்து.  நவராத்திரி கொண்டாடப்படுவதன் நோக்கம்  பலரும் அறிந்ததே எனினும் பரவலாக அறியப்படாத காரணம் ஒன்று உண்டு. அவையாவது : புரட்டாசி மாதம் பித்ருக்களின் மாதம் என்றழைக்கப்படுகிறது ஆகவே இம்மாத அமாவாசை மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு பித்ரு தமர்பனம் செய்யப்படுகிறது . இக்காலகட்டத்தில் ஆன்மாக்கள் தங்கள் வாழ்ந்த மண்ணுலகை நோக்கி வருவார்கள் என்றும்  நம்பப்படுகிறது. அவ்வாறு வ...