Posts

Showing posts from August, 2019

குருவாயூரப்பா...குருவாயூரப்பா !!!

பரந்தாமர் விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் . கோகுலத்தில் வளர்ந்து வந்த  அவரை தரிசிக்கவும் பூஜிக்கவும் அனுதினம் தேவர்கள் தேவலோகத்தில் இருந்து வருவது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு ஓர் நாள் குருவும் வாயுவும் வருகை தந்திருந்தனர். செல்லக் கண்ணனின் குறும்புக கண்களையும் தேனொழுகும் புன்னகையையும் கண்ட அவர்கள் தங்கள் முன் குழந்தை வடிவில் இருப்பவர் பரம் பொருள் என்பதையும்  மறந்து அக்குழந்தையை கையில் அள்ளிக்  கொஞ்சினர். பல்வேறு விளையாட்டுகள் செய்து அவனழகில் தங்களையே மறந்தனர் . குருவோ கிருஷ்ணனை தோளில் தூக்கிக் கொள்ள வாயுவோ தன் பலத்தால் அவர்களை பறக்கச் செய்து கண்ணாமூச்சி காட்டினான் . இருவரும் இணைந்து கிருஷ்ணருக்கு அமுது ஊட்டினர் . அவ்வாறு பகவான் வாயுவோடும் குருவோடும்  க்ஷண நேரத்தில் பறந்து சென்று அமர்ந்த இடம் தான் குருவாயூர். பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூரில் பூசகராக இருந்த பிராமணர் ஒருவர் வெண் குஷ்ட நோயால் அவதியுற்று வந்தார். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் அக்கிராமத்தில் வாழ்ந்த மருத்துவரிடம் அழைத்து வந்தனர். அவரை சோதித்த மருத்துவரோ மிகுந்த தயக்கத்திற...

செவ்வாய் மற்றும் வியாழன்

இன்றைய காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் மீதே அதிகப்படியான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களின் உதவியால் அங்கு மனிதன் உயிர் வாழ்வதற்கான  வாய்ப்புகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. சிவப்பு கிரகம் என்ற புனைப் பெயர் கொண்ட இச்செவ்வாய் கிரகம் நவகிரகங்களில் சூரியனின் இடப்புறம் அமர்ந்துள்ளான். அவனின் பின்புலம் என்ன?! அறிவோமா?! பனி மூடிய கைலாயத்தின் குளுமையில் குடி கொண்டிருந்தாலும் ருத்ரனின் கோபம்  நாம்  அனைவரும் அறிந்த ஒன்றே. எல்லைமீறிய சினத்தால் கைலாயன் நெற்றிக்கண்ணை திறந்தானென்றால்  அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தைத் தாள ஒருவராலும் இயலாது...பார்வதி தேவி உட்பட. அப்பேற்பட்ட  முக்கண்ணன் சிவபெருமான் கோபத்தில் கொந்தளித்த போது அவர் கண்களில் வழிந்த   கண்ணீரிலிருந்து (வேர்வை , ரத்தம் என்றும் கூறுவர்) தோன்றியவர் செவ்வாய் ஆதலால் சிவப்பு நிறம் கொண்டவர் ஆனார். அனல் வடிவான இவருக்கு "அங்காரகன்" என்ற மற்றொரு பெயருமுண்டு. இச்செவ்வாய் திசையில் பிறந்தவர் கடும் கோபக்காரராக இருப்பர். நற்...