Posts

Showing posts from July, 2019

சனி

நவகிரகங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அற்றவர்களும் கூட  இவனை அறிந்திருப்பர் காரணம் தயவு தாட்சண்யம் இன்றி அவரவர் கர்ம வினைக்கேற்ப இவன் அளிக்கும் பலன். சினம் மிக்கவனாக இவன் பிடியிலிருந்து யாரும் தப்பவே முடியாது. கண்டுபிடித்து விட்டீர்கள் தானே?! ஆம் உங்கள் கணிப்பு சரியே?! நவகிரகங்களில் ராகுவிற்கும் கேதுவிற்கு நடுவே அமர்ந்திருக்கும் சனி பகவானே அவன்!!! அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி என்று இவன் ஏன் நம்மை பாடாய் படுத்துகிறான்?! மேலே படியுங்கள். சூரியனுக்கும் அவன் மனைவி சந்தியாவின் நிழல் உருவான சாயா தேவிக்கும் பிறந்தவன் சனி. தாய்ப்பாசம் மிக்கவன். நிழலுக்கு பிறந்தவனாதலால் கருமை நிறம் கொண்டான் ஆனால் சூரியனின் ஞானம் கிடைக்கப்பெற்றவன் ஆனான். கானகம் சென்ற சந்தியா தன் இருப்பிடம் திரும்ப, நிழல் வடிவான சாயா மறைந்தாள். சந்தியாவையே தன் தாய் என நினைத்த சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தியாவின் புதல்வனான யமன் தன் தாயை சனியுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சந்தியாவும் அவனைத் தன்  புதல்வனாக ஏற்கவில்லை. தாய்ப்பாசத்திற்கு ஏங்கித் தவித்த சனி தன் சுற்றத்தார் அனைவ...

புதன்

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது " என்பது பழமொழி. அப்பெருமைக்குரிய புதன் திசையில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும் சூழ்நிலையை அனுசரித்து வாழத்தெரிந்தவர்களாகவும் இருப்பர். இக்கிரகத்திற்குண்டான கதை என்ன?! தெரிந்து கொள்வோம். சந்திரனுக்கு, பிரகஸ்பதியின்(வியாழன்) மனைவியான தாராவில் பிறந்தவன் புதன். தன் விருப்பத்திற்கு மாறாக பிறந்ததால் தாரா புதனை கைவிட சந்திரனாலும் புறக்கணிக்கப்பட்டான். தாய் தந்தையரன்றி வளர்ந்தவன் தன் தனிமைக்குக் காரணமான சந்திரனை வெறுத்தான். இலா  என்ற அரசகுமாரியை மணந்தவனின் மண வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. இலாவின் பெற்றோர்கள் அவள் பிறப்பிற்கு முன் பல ஆண்டுகள்  புத்திரபாக்கியம் இன்றித்  தவித்தனர். இறுதியில் அரசாள வாரிசு வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். யாகத்தில் மகிழ்ந்து அக்னியில்  தோன்றிய சிவன் அவர்களுக்கு என்ன வாரிசு வேண்டும் என்று கேட்க அரசி பெண் குழந்தை என்று தன்னை அறியாமல் கூறிவிட ...அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் மகிழ்வுடன் மகவை ஏற்றுக்கொண்டனர் ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல நாடாள  மைந்தன்...