Posts

Showing posts from June, 2019

சூரியன்

கஷ்யப மஹரிஷிக்கும் அதிதிக்கும் பிறந்த சூரியன் ஒன்பது கிரகங்களில் முதன்மையானவன். மையத்தில் அமர்ந்திருக்கும் அவனையே  அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. இதையே அறிவியலும் வலியுறுத்துகிறது. சூரிய திசையில் ஜனித்தவர்களும் அவன் பார்வை தம் கிரகத்தின் மேல் படும் வாய்ப்பு பெற்றவர்களும் குன்றா  ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டு பொலிவுடன் காணப்படுவர் . பஞ்ச பூதத்தின் அம்சமான சூரியனை நாம் வாழும் பூமியிலிருந்தே உணரவும் பார்க்கவும் முடியும் என்பதும், இந்திய கலாசாரத்தில் மட்டுமல்லாது சீன, கிரேக்க நாடுகளிலும் சூரியனை கடவுளாக சித்தரிக்கின்றனர் என்பதும்   கூடுதல் சிறப்பு. ஏழு குதிரைகளும் ஒற்றைச் சக்கரமும் கொண்ட அவன் தேரை அருணன் செலுத்த சற்றும் ஓய்வின்றி இப்பிரபஞ்ச பெருவெளியை சுற்றி வருகின்றான் சூரியன். அவ்வேழு குதிரைகளே நாம் காணும் வானவில். சூரியனுக்கு சந்தியாவில் பிறந்த குழந்தைகள் மூவர். மனு, யமன், யமி. மனு மனிதரில் படைக்கும் திறனை அளிக்க, யமன் கடைசி கட்டத்தில் அழைத்துக் கொண்டு செல்ல வருகிறான். யமுனை நதியாக பொங்கி ஓடுபவள் யமி. சூரியனுடனான தம் வாழ்கை சந்தியாவிற்கு சலிப்ப...

சந்திரன்

ஒன்பது கிரகங்களிலேயே அழகும் வசீகரமும் கொண்டவன் சந்திரன். நாம் வாழும் பூமியில் இருந்தே இக்கிரகத்தைக்  கண்குளிரக்  காணலாம். அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் குடிகொள்வதும் அது அழிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதும் உலக வாடிக்கை. சந்திரனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. நடந்தது என்ன?! அறிந்து கொள்வோமா?! தட்ஷனின் மகளான ரோகிணியின் மேல் காதல் கொண்ட சந்திரன்  தட்ஷனிடம் தனது விருப்பத்தைத்  தெரிவித்தான். ரோகிணியைச் சேர்த்து  தட்ஷனுக்கு 27 புத்திரிகள் இருந்தனர். அனைவரும் சந்திரனின் அழகில் மயங்கி அவனையே திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டனர். தட்ஷனும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தான். சந்திரன் தனது காதலியின் கரம் பிடிக்க வேறு வழி தெரியாமல் அவளின் சகோதரிகள் அனைவரையும் மணக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான் ஆனால்  அவன் ரோகிணியிடம் மட்டுமே அதிக பிரியத்துடன் நடந்து கொண்டான். பொறுத்துப் பார்த்த சகோதரிகள் மனம் உடைந்து தங்களது  தந்தையிடம் முறையிட்டழுதனர். தட்ஷனும் சந்திரனிடம் தனது மகள்களின் குறையைக் கூற...சந்திரனோ தனது மனதை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டான். கோபத்...