Posts

Showing posts from April, 2019

ராம நவமி

பாற்கடலில் வாசம் செய்யும்  பரந்தாமன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களிலேயே கருணையும் கனிவும் நிரம்பியவர் தசரத மைந்தன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே என்றால் அது மிகையாகாது. சக மனிதர்களிடத்து மட்டுமின்றி அனைத்து உயிரினத்திடமும் கரிசனம் மிக்க  மனிதராக அவதரித்தவர் ராகவ ராமன். தன் தந்தையின் கட்டளையை ஏற்று சித்திரகூடம் என்னும்  வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார்  ராமர். ஓர் நாள் தனது துணைவி சீதையோடு கோதாவரி நதியில் நீராட சென்று கொண்டிருந்த சமயம் வழியில் கிடந்த முள் சீதையின் பாதத்தில்  தைக்க மேலும் நடக்க இயலாமல் அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்துவிட்டாள். "எருக்களைப் பூவிலிருந்து வடியும் பாலை ஊற்றினால் முள் தானாகவே வெளி வந்துவிடும். இங்கேயே அமர்ந்திரு...வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு அச்செடியைத் தேடி விரைந்தார் ராமர். சிறிது நேரத்தில் அச்செடி அவர் கண்களில் படவே அதனருகே சென்றவர் சக மனிதனைப் போல் அதனிடத்தே அன்போடு  பேசினார். பாசத்தோடு தடவிக் கொடுத்தார். பின் தனக்கு நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறி அதன் மலர்களைக் கொய்ய அனுமதி கோரினார். அச்செடியும்...

உ(யு )காதிப் பண்டிகை

வாரணாவத அரக்கு மாளிகையை எரியூட்டி சுரங்கப் பாதை வழியாக விதுரரின் உதவியில் தப்பிய பாண்டவர்கள் இடும்ப வனத்தில் சில காலம் வாழ்ந்து வந்தனர் . கௌரவர்களின் சதியிலிருந்து தாங்கள் தப்பியதை யாரும் தெரிந்து கொள்ளாதிருக்கவும் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கும்  பொருட்டும்  அந்தணர்கள் போல் மாறுவேடமிட்டு ஏகசக்கராநகர் என்னும் கிராமத்திற்கு வந்தனர் பாண்டவர்களும் குந்தியும் . அங்கு ஓர் பிராமணர் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில்   தங்க அனுமதி அளித்தார்.  ஒரு நாள் இரவு அந்தணரும் அவர் மனைவியும் எதோ தங்களுக்குள் பேசிப் புலம்பிக் கொண்டிருப்பதையும் அதைத் தொடர்ந்து மனைவியின் அழுகுரல்  ஓசையையும் குந்தி கேட்க நேர்ந்தது . அவர்களிடம் நடப்பதென்ன என்பதை அறியும் பொருட்டு குந்தி வினவினார் . அதற்கு அந்தணர் ஏகசக்கராநகரில் சிறிது நாட்களாக பகாசுரன் என்ற அரக்கன் அட்டூழியம் செய்து வருவதாகக் கூறினார். "அவன் கிராமத்தில் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடி எங்கள் குடிசைகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான் . எவராலும் அவனை வெல்ல முடியவில்லை இறுதியில் எங்கள் அரசர் அவனிடம் ஓர் உடன...