தசள்
பெரும்பாலான சௌராஷ்டிரா குடும்பங்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை வணங்கி அசைவ உணவுகளை விலக்கி, விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. அதே மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் ...கோவிந்தா ...கோவிந்தா என்ற நாமத்தை ஒரு சேர எழுப்பி அவன் பெயரில் வழங்கப்படும் அன்னதானமே "தசள் " என்ற பெயரால் அறியப்படுகிறது. "தசள்" எப்போது எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெரியவர்களிடம் (70 வயது ) கேட்டபோது " இது தொன்று தொட்டு வரும் வழக்கம்" என்றும் தங்களின் மூதாதையர் காலங்களிலும் (1800-களில்) தசல் இருந்ததாக கூறப்பட்டது . ஒரு சிலர் குடும்ப செழுமைக்காக பரந்தாமனை வேண்டி புதிதாக துவங்கும் பழக்கமும் உண்டு என்றும் கூறுகின்றனர். மாதம் மும்மாரி பொழிந்த பண்டைய காலத்தில் ஆவணி புரட்டாசி மாதங்களில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். மழை நீரால் சூழப்பட்ட நிலங்களில் விவசாயம் தடைபட்டதால் வயலில் கூலி வேலை செய்யும் விவசாயிகளும் இன்ன பிற கூலி வேலை செய்பவர்களும் உண்பதிற்க...